வரதட்சணை, கள்ளக்காதல்... மனைவியை அடித்துக் கொன்றாரா எஸ்.ஐ.? தந்தை புகார்; உறவினர்கள் சாலை மறியல்!

 
கொலை

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காவல் உதவி ஆய்வாளராக (எஸ்.ஐ.) பணிபுரியும் அருண்குமார் என்பவரின் மனைவி இளவரசி (25) மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதுடன், கள்ளக்காதல் விவகாரத்தில் தனது மகளை எஸ்.ஐ.யே அடித்துக் கொன்றுவிட்டதாக இளவரசியின் தந்தை போலீஸில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். எஸ்.ஐ.யைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், விருதுநகர் அரசு மருத்துவமனை முன்பு பெரும் பரபரப்பு நிலவியது.

சிவகாசியைச் சேர்ந்த எஸ்.ஐ. அருண்குமாருக்கும், சிவகங்கை மாவட்டம் மறவன்குளத்தைச் சேர்ந்த இளவரசிக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்தின்போது சீர்வரிசையாக 70 பவுன் நகை, கார் உள்ளிட்டப் பொருட்கள் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

திருமணம்

ஆளுநரின் பாதுகாப்புப் பணி முடிந்து நேற்று முன்தினம் சாத்தூர் என்ஜிஓ காலனியில் உள்ள வீட்டிற்கு அருண்குமார் திரும்பியபோது, கதவு பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்துப் பார்த்தபோது, மனைவி இளவரசி தூக்கில் சடலமாகத் தொங்குவது தெரியவந்தது. இதையடுத்து இளவரசியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இளவரசியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், விருதுநகர் அரசு மருத்துவமனை முன்பு நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இளவரசியின் தந்தை கருப்பசாமி சாத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் அதிர்ச்சிகரமான தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

திருமணத்தின் போது 81 பவுன் நகை, கார் வாங்க ரூ. 5 லட்சம் ரொக்கம் கொடுத்தும், கூடுதல் வரதட்சணை கேட்டு அருண்குமார் தனது மகளைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.

அருண்குமாருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்தது தெரியவரவே, இளவரசி அதனைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண்குமார் இளவரசியின் கழுத்தை நெரித்துக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

திருமணம் கல்யாணம்

நேற்று முன்தினம் பகல் 12 மணிக்குத் தனக்குப் போன் செய்த மகள், "இங்கு எனக்குப் பயமாக உள்ளது, வந்து அழைத்துச் செல்லுங்கள்" என்று கூறியதாகவும், பின்னர் பகல் 1.30 மணியளவில் அருண்குமாரின் உறவினர் ஒருவர் போன் செய்து, இளவரசி தூக்கிட்டுத் தற்கொலை செய்ததாகத் தெரிவித்ததாகவும் கருப்பசாமி கூறியுள்ளார். தனது மகளை அருண்குமார் அடித்துக் கொன்றுள்ளார், எனவே இந்த இறப்பில் மர்மம் உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இளவரசியின் மரணத்திற்குக் காரணமான எஸ்.ஐ. அருண்குமார் மீது உடனடியாக வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்யக் கோரி, உறவினர்கள் மருத்துவமனை முன்பு கோஷமிட்டு மறியலில் ஈடுபட்டனர். விருதுநகர் டிஎஸ்பி யோகேஷ் குமார் தலைமையிலான போலீஸார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால், மறியலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.

இளவரசியின் இறப்பு குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, அதன் அடிப்படையில் எஸ்.ஐ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!