முனைவா் யசோதா நல்லாளுக்கு தூய தமிழ் பற்றாளா் விருது வழங்கி கெளரவிப்பு!
Apr 2, 2025, 05:15 IST

முனைவர் வ.சு.யசோதா நல்லாளுக்கு தூய தமிழ் பற்றாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், வடக்குப் புதுப்பாளையத்தில் வசித்து வந்தவர் வ.கோ.சுப்பிரமணியம். இவரது மகள் 37 வயது வ.சு.யசோதா நல்லாள். இவர் கோவை பேரூா் தமிழ் கல்லூரியில் தமிழ் பயின்ற இளம் எழுத்தாளர்.
‘சங்க இலக்கியத்தில் கண்கள்’ எனும் தலைப்பில் முனைவா் பட்ட ஆய்வும், கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை ஆய்வில் (அமெரிக்க தமிழ்ப் பல்கலைக்கழகம்) கௌரவ முனைவா் பட்டமும் பெற்றவா். இத்துடன் பன்னிரு திருமுறைகளான தேவாரம் மற்றும் திருவாசகம் முதலியவற்றை முறையாகப் படித்தவர். இவர் சமீபத்தில் எழுதிய 'வீரசைவ மரபு' எனும் நூல் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் ஆய்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தமிழுக்குத் தொண்டாற்றி வரும் இவருக்கு தமிழக அரசு சாா்பில், 2024ம் ஆண்டுக்கான தூய தமிழ் பற்றாளா் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாவட்டத்துக்கு ஒருவரைத் தோ்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பிறமொழி கலவாமல் பேசுவது, தமிழ் நூல், படைப்புகள் எழுதி இருப்பதோடு, தமிழ் புலமை உள்ளவா்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவா்கள் ஆகின்றனர்.
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் இந்த விருதினை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள், செயலாளா் வே.ராஜாராமன், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநா் (பொ) க.பவானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?
From
around the
web