கோடையில் குடிநீர் தட்டுப்பாடு... நீர்வரத்து இல்லாததால் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக குறைகிறது!

 
 கோடையில் குடிநீர் தட்டுப்பாடு... நீர்வரத்து இல்லாததால் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக குறைகிறது!
தேனி மாவட்ட ஆறுகளில் நீர்வரத்து இல்லாததால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாய் குறைந்து வருகிறது. இதனால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

தேனி மாவட்டம் மற்றும் தமிழக எல்லையில் வெயிலின் தாக்கம் வெகுவாய் அதிகரித்துள்ளது. மேலும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து பல வாரங்களானதால் ஆறுகளில் நீர்வரத்து வெகுவாய் குறைந்துள்ளது. மூலவைகையைப் பொறுத்தளவில் பல வாரங்களாக வறண்டே கிடக்கிறது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கடந்த மாதம் 21ம் தேதியில் இருந்து குடிநீர் திட்டங்களுக்கு மட்டும் விநாடிக்கு 100கனஅடிநீர் திறந்து விடப்படுகிறது.

இந்த நீர் குடிநீர் திட்டங்களுக்கு பயன்படுத்திய பிறகு எஞ்சியுள்ள நீரையும் சூடான ஆற்றுப்படுகைகள் உறிஞ்சி விடுகின்றன. இதனால் வைகைஅணைக்கான நீர் வரத்து படிப்படியாக குறைந்து நேற்று பூஜ்ய நிலையை அடைந்தது. ஆகவே அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

 கோடையில் குடிநீர் தட்டுப்பாடு... நீர்வரத்து இல்லாததால் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக குறைகிறது!

தற்போது தேனி மாவட்டத்தில் மூலவைகை, பெரியாறு மற்றும் துணைஆறுகள் எதிலும் நீரோட்டம் இல்லை. மேலும் இரண்டாம் போக சாகுபடி முடிந்தததால் கால்வாய் வழியே திறக்கப்பட்ட நீரும் நிறுத்தப்பட்டுள்ளது. நீராதாரங்களில் நீர்வரத்து இல்லாததால் நிலத்தடிநீர்மட்டம் குறைவதுடன், குடிநீர் திட்டங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

வைகை அணையைப் பொறுத்தளவில் தற்போது 53.48அடியும், குடிநீர் திட்டங்களுக்காக 72 கனஅடிநீர் மட்டும் வெளியேற்றப்பட்டு வருகின்றன. நீர்வரத்து இல்லாத நிலையில் நீர்மட்டம் குறைந்து கோடையில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது