போதைப்பொருள் தடுப்பு... மாணவர்களுடன் எஸ்பி கலந்துரையாடல்!

தூத்துக்குடி தருவை மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்களிடம் எஸ்பி ஆல்பர்ட் ஜான், கலந்துரையாடி போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேற்று மாலை தூத்துக்குடி தருவை மைதானத்திற்கு சென்று அங்கு விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
அப்போது அவர்களிடம் விளையாட்டு மற்றும் கல்வியை சிறப்பாக கற்க வேண்டும் என்றும், போதை பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகாமல் அவற்றைத் தவிர்த்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை மதித்து நடந்து எதிர்காலத்தில் சமுதாயத்தில் சிறந்தவர்களாகவும், சாதனையாளர்களாகவும் வர வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கி ஊக்கப்படுத்தினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!