குடித்துவிட்டு ஒரே தொல்லை.. மனைவி புகாரால் கைதாகிறாரா இந்திய கிரிக்கெட் வீரர் !

 
ஆண்ட்ரியா வினோத் காம்ப்ளி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. சச்சின் தெண்டுக்கரின் மிகநெருங்கிய நண்பர். அவருடன் களத்தில் ஒன்றாக விளையாடியுள்ளார். இவர் அணிக்காக விளையாடும்போதே, மது அருந்திவிட்டு ரகளை செய்வார் என புகார் உண்டு. அந்த பழக்கம் இப்போதுவரை மாறவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. 

ஆண்ட்ரியா வினோத் காம்ப்ளி

மகாராஷ்டிரா மாநிலம் பந்த்ரா பகுதியில் உள்ள பிளாட் ஒன்றில் வினோத் காம்ப்ளி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், காம்ப்ளி மீது அவரது மனைவி ஆண்ட்ரியா போலீசில் புகார் அளித்து உள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதில், காம்ப்ளி நன்றாக குடித்து விட்டு, போதையில் பிளாட்டுக்கு திரும்பி வந்து உள்ளார். அப்போது, மனைவியை பார்த்து, தகாத வார்த்தைகளால் திட்டியபடி இருந்து உள்ளார். இதனை அவரது 12 வயது மகன் உடன் இருந்து பார்த்த சாட்சியாக உள்ளார். , காம்ப்ளி சமையலறைக்கு உள்ளே சென்று சமையல் செய்ய உபயோகப்படும் பாத்திரம் ஒன்றின் கைப்பிடியை எடுத்து வந்து மனைவி மீது வீசி இருக்கிறார். இதில், மனைவியின் தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ஆண்ட்ரியா வினோத் காம்ப்ளி

இதனை தொடர்ந்து, ஆபத்து விளைவிக்கும் ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், அவமதிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பந்திரா போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதனால் அவர் கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

 லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web