ஜனவரி 22 வரை வறண்ட வானிலை!

 
வறண்ட வானிலை
 

தமிழகத்தில் நாளை முதல் ஜனவரி 22-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவ வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை ஓரிரு நாட்களில் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இருந்து விலகும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் மழைக்கு வாய்ப்பில்லை என கூறப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கமான அளவை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தருமபுரியில் 18.5 டிகிரி, கொடைக்கானலில் 7.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் நாளை ஓரளவு மேகமூட்டம் இருக்கும். இன்று முதல் 20-ம் தேதி வரை மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!