ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனியார் மருத்துவமனையில் அனுமதி!
இன்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடுமையான காய்ச்சல் காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனது பிறந்த நாளை இன்று கொண்டாட உள்ள நிலையில், நேற்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், நேற்று இரவு சென்னை திரும்பியுள்ளார். நேற்று இரவு அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கமாக அவரது பிறந்த நாளை காங்கிரஸார் உற்சாகமாக கொண்டாடுவார்கள். ஆனால் அவரது மகன் மறைவுக்கு பிறகு பிறந்தநாள் கொண்டாடுவதை தவிர்த்துவிட்டார். வீட்டுக்கு வரும் நிர்வாகிகளை மட்டும் சந்திப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
இருப்பினும் நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் நிகழ்ச்சிகள் அனைத்து ரத்து செய்யப்பட்டுள்ளன.
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!