அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 3.3 ஆகப் பதிவு!

 
நிலநடுக்கம்

அருணாச்சலப் பிரதேசத்தின் ஷி யோமி பகுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலையில் லேசான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அதிகாலை 2:38 மணியளவில் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.3 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் ஆழம் 10 கிலோமீட்டராக இருந்தது.

நிலநடுக்கம்

28.53 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 94.48 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவிதத் தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!