அதிகாலையில் அதிர்ச்சி... அஸ்ஸாம், திரிபுராவில் நிலநடுக்கம்!
Jan 5, 2026, 09:38 IST
அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் இன்று அதிகாலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாம் மாநிலம் மோரிகான் பகுதியில் அதிகாலை 4.17 மணிக்கு நிலநடுக்கம் பதிவானது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக இருந்தது.

இதற்கு முன்னதாக திரிபுரா மாநிலம் கோமதி பகுதியில் அதிகாலை 3.33 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவாகியுள்ளது. இரு மாநிலங்களிலும் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலநடுக்கங்களால் பெரிய சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இருப்பினும் சில இடங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடியதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
