அதிகாலையில் அதிர்ச்சி... நாகாலாந்தில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
நாகாலாந்து மாநிலம் கிஃபிரேவில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) காலை 3.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்படி, ரிக்டர் அளவுகோளில் 4.0 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் பூமிக்கடியில் 90 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும், அதன் அட்சரேகை 25.74° வடக்கு, தீர்க்கரேகை 94.84° கிழக்கு எனக் கூறப்பட்டுள்ளது. நிலநடுக்கம் அதிகாலை 4.17 மணியளவில் பதிவாகியுள்ளது.

தற்போது யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ, சொத்துக்கள் சேதமடைந்ததாகவோ எந்த தகவலும் வெளியாகவில்லை. பொதுமக்கள் வலுவான அதிர்வை அனுபவித்தாலும், நிலநடுக்கத்தின் தீங்கு இன்றுடன் கட்டுப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
