பங்குனி உத்திர விழா எதிரொலி... பூக்களின் விலை கடும் உயர்வு!
Apr 10, 2025, 17:50 IST

பங்குனி உத்திரத்தை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான பங்குனி உத்திர விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தோவாளை மலர் சந்தையில் பிச்சிப்பூ கிலோ ரூ.2500க்கு விற்பனை ஆகிறது. மல்லிகை பூ கிலோ ரூ.1000க்கும், அரளி பூ ரூ.500க்கும் விற்பனை ஆகிறது. பூக்களின் தேவை அதிகரிப்பால் வியாபாரிகளும், பொதுமக்களும் பூக்களை ஆர்வமுடன் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web