சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை … இபிஎஸ் உறுதி!
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து அமித் ஷா விரிவாக கேட்டறிந்ததாக கூறினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என எடப்பாடி உறுதியாக தெரிவித்தார்.

கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையவுள்ளதாகவும், இது வெற்றிக் கூட்டணியாக அமையும் என்றும் கூறினார். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக வலுவான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக வலியுறுத்தினார். டிடிவி தினகரன் இணைவாரா என்ற கேள்விக்கு, கூட்டணி இன்னும் வலுவடையும், நேரம் வந்தால் அனைவரையும் அழைத்து அறிவிப்பேன் என்று பதிலளித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பில்லை என திட்டவட்டமாக மறுத்தார். ஓபிஎஸ்-க்கு அதிமுகவில் இடமில்லை என்றும் கூறினார். கூட்டணிக்கு அதிமுகவே தலைமை தாங்கும் என தெரிவித்த எடப்பாடி, திமுக தவறான தகவல்களை பரப்புகிறது என குற்றம்சாட்டினார். 2026ல் திமுகவை வீழ்த்தி அதிமுக ஆட்சி அமைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
