எடப்பாடி அவராவே பதவி பதவி விலகணும்... இல்லைனா அவமரியாதையை சந்திக்க தயாராகுங்க... ஓபிஎஸ் ஆவேசம்!

 
ஓபிஎஸ் இபிஎஸ்

தமிழகத்தில் அதிமுக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், இன்று தூத்துக்குடி மட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.  ” பிரிந்தது பிரிந்தது தான் இணைவதற்கெல்லாம் சாத்தியமே கிடையாது. பிரிந்தது மட்டுமில்லை இந்த கட்சி எதிரிகளிடம் அடைமானம் வைப்பதை என்னால் பார்க்க முடியாது. அதிமுக அலுவலகத்தில் ரவுடிகள் மூலம் ஓபிஎஸ் தலைமையில் ரவுடிகளை அழைத்து சென்று உடைத்தார்.

கட்சி தலைமை கோவில் போன்றது அதனை என்றைக்கு உடைத்தார்களோ அன்றைக்கே அவர் கட்சியில் இருப்பதற்கு தகுதி இல்லை. அந்த அடிப்படையில் அவரை கட்சியில் இணைத்துக்கொள்ளும் வாய்ப்பே இல்லை” எனவும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  

ஓபிஎஸ்/ஈபிஎஸ்  போர்

அதற்கு பதில் அளிக்கும் வகையில்  எந்தக் காலத்திலும் அதிமுக வெற்றி பெறக் கூடாது என இபிஎஸ் நடவடிக்கைகளை  எடுத்து வருகிறார் என ஓபிஎஸ் பேசியுள்ளார்.  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்  கட்சியில் இணையவேண்டும் என நான் சொல்லவே இல்லை.  பிரிந்து கிடைக்கும் அதிமுக ஒன்றாக இணையவேண்டும் என்பது தான் ஆசை. அப்படி இணைந்தால் தான் வெற்றிபெற முடியும் என்ற சூழ்நிலை உருவாகும்.

இபிஎஸ், ஓபிஎஸ்

இந்த விஷயத்தை தான் நான் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு இருக்கிறேன். இது புரியாமல் தான் பேசி வருகின்றனர். அவருக்கு (இபிஎஸ்) எந்தக் காலத்திலும் அதிமுக வெற்றி பெறக் கூடாது என நடவடிக்கைகளை தொடர்ச்சியாக செய்துகொண்டு இருக்கிறார். ஒற்றைத்தலைமை வந்தால் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெறுவேன் என இபிஎஸ் கூறிவருகிறார்.  அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து இபிஎஸ் மரியாதையாக விலக வேண்டும். இல்லாவிட்டால் அவமரியாதையை சந்திப்பார்” என ஓபிஎஸ் பேசியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web