காஷ்மீர் தாக்குதல் தீவிரவாதிகள் உருவப் பொம்மை எரிப்பு... காங்கிரஸ் கட்சியினர் ஆவேசம்!

காஷ்மீர் பகல்ஹாம் பகுதியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் உருவ பொம்மையை ஏரித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கொடூர தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 26 பேரை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து தூத்துக்குடி சத்திரம் பஸ் ஸ்டாப் அருகில் மாநகர் மாவட்ட தலைவர் சிஎஸ் முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்பு பயங்கரவாத கும்பலை கண்டித்து உருவ பொம்மையை தீவைத்து எரித்தனர். பின்னர் பயங்கரவாத செயலுக்கு எதிராக மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!