கேட்பாரற்று கிடந்த தங்கத்தை மீட்ட முதியவர்கள்.. ரொக்கப் பரிசுகள் கொடுத்து கௌரவித்த காவல்துறையினர்!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, கடமலைக்குண்டு கிராமத்தில், தாணிக்கொடி மற்றும் பொன்னையா என்ற இரண்டு முதியவர்கள், தள்ளுவண்டியில் நிலக்கடலை விற்றுக் கொண்டிருந்தனர். நேற்று (பிப்ரவரி 15) அவர்கள் வழக்கம் போல் தங்கள் தொழிலைச் செய்து கொண்டிருந்தனர். அப்போது, சாலையில் ஒரு பை கிடந்தது. பையை எடுத்தபோது, உள்ளே இரண்டு பவுன் மதிப்புள்ள இரண்டு தங்க மோதிரங்கள் மற்றும் ரூ.10,500 ரொக்கம் இருந்தது.
இது குறித்து இரண்டு முதியவர்களும் அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளனர். அதன் பிறகு, அவர்கள் கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் நகை மற்றும் பணத்தை ஒப்படைத்தனர். நகைகளைப் பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பிரேமானந்தன், நகைகள் யாருக்குச் சொந்தமானது என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தியுள்ளார்.
இதற்கிடையில், கடமலைக்குண்டு அருகே உள்ள டாணத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளி துர்க்கையம்மாள், தனது நகை மற்றும் பணம் காணாமல் போனதாக புகார் அளிக்க கடமலைக்குண்டு காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். இதில், அந்தப் பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் கொண்டு வந்த நகை மற்றும் பணம் அவருடையது என்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நகைகளையும் பணத்தையும் இழந்த பெண்ணிடம், அவற்றைக் கண்டுபிடித்த முதியவர்கள் மூலம் போலீசார் ஒப்படைத்தனர். காணாமல் போன நகைகளையும் பணத்தையும் கண்டுபிடித்த மகிழ்ச்சியில், அந்தப் பெண் முதியவர்களின் காலில் விழுந்து கண்ணீருடன் நன்றி தெரிவித்தார். முதியவர்களின் நேர்மையைப் பாராட்டி, காவல்துறையினர் அவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் சால்வைகளை போர்த்தி கௌரவித்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!