தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல்... ?
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

வரும் பிப்ரவரி முதல் வாரத்தில், தலைமை தேர்தல் ஆணையம் தலைமையிலான குழு தமிழகத்தில் 2 நாட்கள் முகாமிட்டு தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளனர். முதல் நாளில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெறும். அதன்பிறகு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடைபெறும்.

மேலும் வரித்துறை, சிஆர்பிஎப், வணிக வரித்துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்துவார்கள். அனைத்து ஆய்வுகளுக்குப் பிறகு, தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்து தகவல் வழங்குவார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
