டிசம்பர் 25ம் தேதி ஞாயிறு அட்டவணைப்படி மின்சார ரயில்கள் ...!

 
புறநகர் ரயில்

சென்னையின் புறநகரில் வசித்து வருபவர்களில் கல்வி மற்றும் பணிக்காக தினமும் லட்சக்கணக்கானோர் சென்னை வந்து செல்கின்றனர். இவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்திருப்பவை புறநகர் மின்சார ரயில்கள் தான். பணி நாட்களில் இவை தேவை மற்றும் அவசியத்தின் அடிப்படையில் கூடுதலாக இயக்கப்படும். அதே நேரத்தில் விடுமுறை நாட்களில் குறைவாகவே இயக்கப்பட்டு வருகின்றன.

மின்சார ரயில்

அந்த வகையில் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் கோலாகலமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. நடப்பாண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 3நாட்களே மீதம் உள்ளன. இந்நிலையில், பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில்  முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.

ரயில்

அதன் படி கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25ம் தேதி  பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பதால்  சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிறு கால அட்டவணையின்படி இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web