நூதன திருட்டில் வசமாக சிக்கிய திமுக நிர்வாகி!! தட்டி தூக்கிய காவல்துறை !
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் பகுதியில் அரசுக்கு சொந்தமான மின் ஒயர்கள் காணாமல்போனதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வெங்கல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், அப்பகுதி திமுக இளைஞரணி அமைப்பாளர் அலெக்ஸ் மின் ஒயர்களை திருடியது தெரியவந்தது.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதாவது, கடந்த 8 ஆண்டுகளாக அலெக்ஸ் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. திருடப்பட்ட மின் ஒயர்களை மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. திருடப்பட்ட மின் ஒயர்களை அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் இருக்கும் பழைய இரும்பு கடைகளில் விற்று பணமாக்கி வந்துள்ளார்.
அலெக்சாண்டர் மீது திருவள்ளூர் மாவட்டம் புள்ளரம்பாக்கம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் ஆகிய பகுதிகளில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!