லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!! பரபரக்கும் தலைநகரம்!!

 
லைகா

பொன்னியின் செல்வன் 2  திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுவதும் 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி  சக்கை போடு போட்டு வருகிறது. இதுவரை 350 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னையில் அமைந்துள்ள பெரும் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று  லைகா நிறுவனம்.

லைகா

தற்போது லைகா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 8 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.  சட்டவிரோத பண பரிமாற்ற புகாரின் பேரில் சென்னையில் லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக துறை சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

லைகா

அதன்படி தி.நகர்,  அடையாறு, காரப்பாக்கம் உட்பட சென்னையில்  8 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. துணை ராணுவத்தின் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களின் படங்களை தயாரித்து வரும் லைகா நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்துவது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web