‘எம்புரான்’ பட தயாரிப்பாளருக்கு சொந்தமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை திடீர் சோதனை.!

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘எம்புரான்’ திரைப்பட தயாரிப்பாளருக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் நடைபெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது.அதன்படி, ‘எம்புரான்’ திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபாலன் என்பவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 10 மணி முதல் தொடங்கிய சோதனை பிற்பகல் வரை நீடித்து வருகிறது.
2017ல் கோகுலம் சிட்பண்ட்ஸ்க்கு சொந்தமான தமிழக மற்றும் புதுச்சேரி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்புரான் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறி பல்வேறு தரப்பினரிடம் இருந்து கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்துள்ளது.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லால் நடித்து, பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கிய ஒரு பிரம்மாண்ட அதிரடி திரைப்படம் எம்புரான். இது 2019 ல் வெளியான ‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகமாகும். இப்படத்தை ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ், மற்றும் லைகா புரொடக்க்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன. இதில் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கோகுலம் கோபாலன் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவர்.
எம்புரான் படம் மார்ச் 27ம் தேதி அன்று வெளியாகி, உலக அளவில் 5 நாட்களில் ரூ 200 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஆனால், படத்தில் 2002 குஜராத் கலவரத்தை நினைவூட்டும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சங்க பரிவார் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனையடுத்து, சர்ச்சைக்குரிய 17 காட்சிகளை நீக்குவதாக மோகன்லால் அறிவித்திருந்தார். மேலும், படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்த காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!