சென்னையில் எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை மண்ணடியில் எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மண்ணடியில் அமைந்துள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்திற்கு நான்கு வாகனங்களில் வந்த அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையொட்டி அந்த பகுதியில் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் தகவல் பரவியதால், அந்த பகுதியைச் சோ்ந்த ஏராளமான எஸ்டிபிஐ கட்சியினா், இளைஞா்கள் கட்சி அலுவலகம் முன்பு திரண்டு சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளைக் கண்டித்து கோஷமிட்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!