காதலி பிரிந்து சென்றதால் ஆத்திரம்.. 17 வயது மகனை வெட்டிக்கொன்ற கள்ளக்காதலன் !!

 
தனலட்சுமி

சென்னை விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை தெரு  பகுதியை சேர்ந்தவர் இளஞ்செழியன்(38). பிளம்பரான இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், மதன் குமார்(17) மற்றும் ஜீவா என்கிற மகன்கள் உள்ளனர். மதன் குமார் வேளச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். தனலட்சுமி புளியந்தோப்பில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். 

மதுபோதைக்கு அடிமையான இளஞ்செழியன் தினமும் மனைவி தனலட்சுமியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். தனலட்சுமிக்கு தன்னுடன் பணியாற்றிய கார்த்திக் (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அந்த பெண்ணின் கணவர் இளஞ்செழியனை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க உதவி புரிந்துள்ளார். நாளடைவில் தனலட்சுமிக்கும், கார்த்திக்கும் இடையே இருந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.

தனலட்சுமி

இந்நிலையில் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக வேளச்சேரியில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். சமீபத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனலட்சுமி கார்த்திக்கிடம் இருந்து பிரிந்து, மீண்டும் கணவருடன் விருகம்பாக்கத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் காதலி தனலட்சுமி பிரிந்துசென்றதை கார்த்திக்கால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடந்த 7ஆம் தேதி விருகம்பாக்கத்தில் உள்ள இளஞ்செழியன் வீட்டிற்கு சென்று காதலி தனலட்சுமியை தன்னுடன் வருமாறு கார்த்திக் அழைத்துள்ளார்.

அப்போது இளஞ்செழியனின் மகன் மதன்குமார் மற்றும் கார்த்திக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், திடீரென கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிறுவன் மதன்குமாரின் வயிறு மற்றும் கையில் குத்திவிட்டு தப்பியோடி உள்ளார். படுகாயமடைந்த மதன்குமாரை அருகிலிருந்த நபர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் ஆபாசமாக பேசுதல்,கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கார்த்திக்கை தேடி வந்தனர். இதற்கிடையே இளஞ்செழியன் வீட்டருகே முன்பு நிறுத்திவிட்டு சென்ற பைக்கை மீண்டும் எடுக்க வந்த போது கார்த்திக்கை போலீசார் மடக்கி கைது செய்தனர்.

தனலட்சுமி

இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய தந்தை இளஞ்செழியனோடு சேர்ந்து வாழுமாறு தாய் தனலட்சுமியை அவரது மகன் மதன்குமார் மனதை மாற்றி அழைத்து சென்றார். இதனால் தன்னிடம் இருந்து காதலி தனலட்சுமி பிரிந்து செல்ல சிறுவன் மதன்குமாரே காரணம் என ஆத்திரமடைந்து மதன்குமாரை கத்தியால் குத்தியதாக  வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் மதன்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web