ஈரோடு இடைத்தேர்தல்... நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் களம் இறக்கப்பட்டுள்ளார்.
இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும், அதே கூட்டணியில் இருக்கும் தேமுதிகவும் அறிவித்தன. பாஜகவும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில் திமுகவும், நாம் தமிழர் கட்சிக்கும் நேருக்கு நேராக மோதுகின்றன.
இந்தத் தேர்தலில், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. இதனால் தேர்தலை புறக்கணித்த அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகளின் ஓட்டு யாருக்கு கிடைக்கும்? என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக என் அன்புத்தங்கை மா.கி.சீதாலட்சுமி (முதுகளை ஆய்வியல் நிறைஞர் (M.A. M.Phil.) அவர்கள் போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!