ஈரோடு இடைத்தேர்தல்.. ஓ.பி.எஸ். தரப்பு வாபஸ்!

 
எடப்பாடி

ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுகிறார். களை கட்டுகிறது ஈரோடு கிழக்கு மாவட்ட இடைத்தேர்தல். இது நாள் வரையில் இரட்டை இலையாக இருந்து வந்த அதிமுக, இலை தனியே, துளிர் தனியே என்று சிதறு தேங்காயாய் அதிமுக வோட்டு வங்கியை சிதறடித்துக் கொண்டிருந்த நிலையில், திமுக துணையுடன் காங்கிரஸ் சார்பில் இளங்கோவனின் வெற்றி எளிதில் கிடைத்து விடும் என்று ஆரூடம் சொல்லி வந்தார்கள் அரசியல் நோக்கர்கள். 

ஆனால், விஷயம் வேறு விதமாக கணக்கு வகுத்திருக்கிறது. முழுமையாக இணைந்த இரட்டை இலைக்கே ஆதரவு என்று சொல்லியிருக்கிறார்கள் பலரும். ஆளுங்கட்சி மீது மக்களுக்கு திருப்தியில்லை என்கிற யூகங்களும், செய்தியும் நிஜமாகுமா? என்பது இந்த இடைத்தேர்தலில் தெரிந்து விடும். முட்டிமோதிக் கொண்டிருந்த ஓபிஎஸ்., இபிஎஸ் தரப்பு இப்போது இரட்டை இலைக்காக சமாதானமாகி இருக்கிறார்கள். இதைத் தான் பாஜகவும் விரும்பியது.

திமுகவை எதிர்க்க இரட்டை இலை சின்னம் அவசியம். வாக்குகள் இரட்டை இலை சின்னத்துக்கு தான். இவர்கள் இருவருக்கும் கிடையாது என்பது இவர்களுக்குமே தெரியும். இந்நிலையில், எடப்பாடி தரப்பு வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க மாட்டோம். ஆனால், இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க கேட்போம்’ என்று உலகத்திலேயே தான் ஒருவர் மட்டுமே புத்திசாலி என்கிற ரீதியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு செய்தியை கசிய விடுகிறார்கள். இதெல்லாம் காலக்கொடுமை தான். 

சென்னையில் பன்னீர்செல்வம் இல்லத்தில் நடந்த ஆலோசனையில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனையில் வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறப்படுவதாகவும் இரட்டை இலை சின்னம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக வேட்பாளர் வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது.

ஓ.பி.எஸ்

ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட கூடாது என முடிவுகளை எடுத்தோம். செந்தில் முருகன் போட்டியில் இருந்து விலகுகிறார் என அறிவித்தார்.

முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுவார் என பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் இடைத்தேர்தலில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என அறிவித்தார். இதனால் அதிமுகவில் குழப்பமான சூழல் நிலவியது.

ஓ.பி.எஸ்

பின்னர் அண்ணாமலை இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து உச்சநீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் தேர்தலில் இருந்து பன்னீர்செல்லவம் தரப்பு விலகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web