தொழில்நுட்பம் வளர்ந்தாலும் ஹேக்கர்கள் நமக்கு ஒரு படி முன்னாடி தான்... நடிகை குஷ்பூவின் எக்ஸ் பக்கம் ஹேக் !

தமிழ் திரையுலகில் 90 களில் முண்ணனி நடிகையாக இருந்தவர் நடிகை குஷ்பூ. இவர் தற்போது பாஜக நிர்வாகியாகவும் செயல்பட்டு வருகிறார். சென்னை, பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்புவின் எக்ஸ் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து நடிகை குஷ்பு 'இன்று காலை எக்ஸ் பக்கத்தில் நுழைய முயற்சித்தேன். ஆனால், யாரோ புது மெயில் ஐடி பயன்படுத்தி லாகின் செய்ததாக மெசேஜ் வந்தது. மர்மநபர்கள் புது ஐடி போட்டு என் எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துள்ளனர்.
இது குறித்து சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளேன். தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் ஹேக்கர்கள் எப்போதும் நமக்கு ஒரு படி முன்னாடிதான் இருக்கிறார்கள்' எனக் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!