நேற்று பிறந்தவன் எல்லாம் நான்தான் அடுத்த முதல்வர்ன்னு சொல்றான்... ஸ்டாலின் பேச்சு!

 
நான் பேசுவதை கேட்டுவிட்டு  வெளிநடப்பு செய்ங்க... இபிஎஸ் சட்டசபையை விட்டு வெளியேறும் போது முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்... !  
நேற்று பிறந்தவன், கட்சி ஆரம்பித்தவன் எல்லாம் நான் தான் அடுத்த முதலமைச்சர் என்று சொல்கிறான். அரசியலில் அரிச்சுவடி தெரியாதவர் எல்லாம் நான்தான் முதலமைச்சர் என்று சொல்லிக் சொல்கிறான் என்று முதல்வர் ஸ்டாலின், தவெக கட்சி தலைவர் விஜய்யை சாடி பேசியுள்ளார். 

சென்னை தேனாம்பேட்டையில் அண்ணா அறிவாலயத்தின் பின்புறம் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் ஏற்பாட்டில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் பொது மக்கள் 2 ஆயிரம் பேர் வரை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், “நானும் டெல்டாகாரன் தான், மண்ணின் மைந்தன். அதைவிட இன்னும் சொல்ல வேண்டுமென்றால் மயிலாடுதுறை மாப்பிள்ளை நான். எப்பவும் மாப்பிள்ளையாக இருக்கக்கூடியவன் நான்.  மாப்பிள்ளையாக இருந்து மகிழ்ந்த முகத்துடன் வரவேற்கிறேன். 

ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இன்று இணைந்துள்ள உங்களையெல்லாம், நம் மாவட்ட கழக செயலாளர் முறையாக வரவேற்று இருந்தாலும் தலைமை கழகத்தின் சார்பாக பெருமையோடு சொல்ல வேண்டும் என்றால் தலைவர் கலைஞர் மீண்டும் ஒருமுறை வருக வருக என வரவேற்கிறேன். 

உங்களை நாங்கள் இங்கு அரவணைத்து இந்த இயக்கத்தில் சேர்த்துக் கொள்கிறோம் என்று சொன்னால் திமுக என்பது மக்களுக்காக இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இந்த இயக்கம் தொடங்கப்பட்ட பொழுது, ஆட்சிக்கு வரவேண்டும் ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் ஆட்சி தான் லட்சியம் என்று இல்லை. 

ஆனால் இன்று தொடங்கப்பட்ட கட்சி எல்லாம் இந்த எண்ணத்தில் தான் இருக்கிறார்கள். நேற்று கட்சி தொடங்கினவன் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர். அரசியலில் அரிச்சுவடி தெரியாதவர் எல்லாம் நான்தான் முதலமைச்சர் என்று சொல்லிக் கொள்கிறான்.

உணராதவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைவுபடுத்த விரும்புகிறேன் இந்த இயக்கம் தொடங்கப்பட்ட போது அறிஞர் அண்ணா கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் தொடங்கி வைத்த போது ஆட்சி அதிகாரத்திற்காக அல்ல ஏழை எளிய மக்களுக்காக அடித்தட்டு மக்களுக்காக தொழிலாளர் வர்க்கத்திற்காக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த கழகம் தொடங்கப்படுகிறது என்று அழைப்பு விடுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். 

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தொடங்கிய உடனே தேர்தல் களத்திற்கு வரவில்லை. திருச்சியில் மாநாட்டை கூட்டி அண்ணா அவர்கள் வந்த தொண்டர்கள் இடத்தில் ஒரு பெட்டியை வைத்து தேர்தலில் நிற்கலாமா வேண்டாமா என்று எழுதி போட சொல்லி பிறகு அந்த பெட்டியை திறந்து சீட்டை எண்ணி பார்த்து தேர்தலில் நிற்கலாம் என்று அதிகம் பேர் சொன்னதை ஏற்றுக்கொண்டு தேர்தலில் நிற்க உத்தரவிட்டார். சட்டமன்ற உறுப்பினர்களாக 15 இடங்களில் வெற்றி பெற்றோம்.  அண்ணா மறைந்த பிறகு கலைஞர் பொறுப்பை ஏற்று அந்த இடத்தை பூர்த்தி செய்தார். 

நான்காண்டுகள் முடிந்து ஐந்தாவது ஆண்டு இந்த முறை ஆட்சிக்கு வந்து தொடங்க உள்ளது.ஆறு முறை வெற்றி பெற்றுள்ளோம் மீண்டும் ஏழாவது முறையும் வெற்றி பெற உள்ளோம். 

அகங்காரத்தில் திமிராக சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். ஆட்சிக்கு வந்தே தீர வேண்டும் பதவி சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்று சொல்கிறேன் என நினைக்க வேண்டாம்.

ஸ்டாலின்

தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தது என்று தெரியும், நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் சரி பதவிக்கு வந்தால் பொறுப்புகளை செய்வோம் திட்டங்களை செய்வோம் என்று தேர்தல் அறிக்கையாக கொடுத்து வாக்கு கேட்க போவோம், ஏறக்குறைய 90 சதவீதத்திற்கும் மேல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு வாக்குறுதிகள் தான் உள்ளன அதையும் விரைவில் நிறைவேற்றுவோம்.

எம்ஜிஆர் கொண்டு வந்தது சத்துணவு திட்டம் கலைஞர் கொண்டு வந்தது உண்மையான சத்துணவு திட்டம் முட்டையுடன் வழங்கினோம் திமுகவை புரிந்து வைத்திருக்கக்கூடிய மக்களுக்கு சில கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள், இந்த குழப்பத்தை சரி செய்வதற்கு நீங்கள் பிரச்சார பீரங்கிகளாக மாற வேண்டும். விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன் அப்போது மாவட்ட செயலாளர்களுடன் உங்களை எல்லாம் சந்திக்கிறேன்” என்றார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web