பரபரப்பு!! நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு!!
வழக்கம் போல் இன்றும் கோவை முதலாவது குற்றவியல் நீதிமன்ற வளாகம் செயல்படத் தொடங்கிய நேரத்தில் கவிதா என்ற பெண் மீது சிவக்குமார் என்பவர் ஆசிட் வீசினார். இந்த ஆசிட் வீச்சில் சிவக்குமாரை தடுக்க முயன்றவருக்கும் காயம் ஏற்பட்டது. அதே பகுதியில் நின்று கொண்டிருந்த வழக்கறிஞர்கள் ஆசிட் வீசிய நபரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
ஆசிட் வீச்சில் காயமடைந்த கவிதா தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு சிவக்குமாரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் கவிதாவின் கணவன் சிவக்குமார் தான் ஆசிட் வீசியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் நீதிமன்றம் அருகே இரண்டு இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது நீதிமன்ற வளாகத்திலேயே பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க