சொத்து வரி உயர்வுக்கான காரணம் இது தான்... சட்டப்பேரவையில் கே.என்.நேரு!

 
கே.என்.நேரு

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. தொகுதிவாரியாக கேட்கப்படும் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில்  அமைச்சர் கே.என்.நேரு, அம்மா உணவகம் எங்கும் மூடப்படவில்லை. சென்னையில் பருவமழை காலத்தில் பொது மக்களுக்கு அம்மா உணவகம் மூலம் தான் உணவு அளிக்கப்பட்டது.   காவிரியை ஆதாரமாகக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தடைபடாது. 

கே என் நேரு

நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் உடன் ஊரகப்பகுதிகள் இணைக்கப்படும் போதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் எந்த விதத்திலும் தடைபடாமல் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.சொத்து வரி உயர்வுக்கான காரணம் குறித்து  2018-20 களில்  50%, 100%, 200% என சொத்து வரிகளை உயர்த்தியது அதிமுக.

கே.என்.நேரு

ஆனால் திமுக ஆட்சி வந்த பிறகு 25%, 50%, 100% என்ற அளவில் போடுங்கள் என முதல்வர் அறிவுறுத்தினார். அவரது அறிவுறுத்தலின் பேரில்  மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவதற்காகவே வரி உயர்த்தப்பட்டது என்று ஏற்கனவே அரசு விளக்கம் அளித்துள்ளது.  மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் சொத்து வரி உயர்வு என்பது மிக மிகக் குறைவு தான் எனக் கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web