போட்றா வெடிய... மார்ச் 13,14ம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை... வெளியானது அறிவிப்பு!

மாசி சிவராத்திரி திருவிழா நிறைவடைந்த நிலையில், அடுத்து மாசி மகம் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மாசி மகம் கொண்டாடப்பட உள்ள நிலையில் வரும் மார்ச் 13ம் தேதி வியாழக்கிழமை காரைக்கால் மாவட்டத்திற்கும், மார்ச் 14ம் தேதி வெள்ளிக்கிழமை புதுச்சேரியிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்த உள்ளூர் விடுமுறை தினங்களில் முக்கிய அரசு தேர்வுகள் இருந்தால் வழக்கம் போல நடைபெறும் எனவும், முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆண்டுதோறும் மாசி மகம் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வைத்திக்குப்பம் கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் விழாவில் தமிழகம், புதுச்சேரியிலிருந்தும் ஏராளமான கோயில்களை சேர்ந்த உற்சவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
ஒரே இடத்தில் பல்வேறு கோயில்களின் உற்சவர்களும் எழுந்தருள்வதால் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாசி மகத்திற்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்வது வழக்கம். வைத்திக்குப்பம் கடற்கரையில் நடக்கும் மாசிமகம் தீர்த்தவாரி விழாவையொட்டி பக்கதர்கள் வசதி மற்றும் பாதுகாப்புக்காக பல்வேறு ஏற்பாடுகளை அரசு நிர்வகம் செய்து வருகிறது. திருட்டு, மோதல் போன்ற அசம்பாவிதங்களை தடுக்க சிசிடிவி கண்காணிப்பு உட்பட பல பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!