மார்ச் 10ம் தேதி பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்!

 
பத்திரப்பதிவு

பொதுமக்களின் தேவையின் அடிப்படையில் சார்பதிவாளர் அலுவலகங்கள் விடுமுறை நாட்களிலும் திறந்து வைக்கப்படுகின்றன. அந்த வகையில் பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில்   மாசி மாதத்தின் முகூர்த்தநாளான மார்ச் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் பதிவுத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில்  சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்வது வழக்கமான ஒன்று தான்.  

பத்திரப்பதிவு
தற்போது மாசி மாதத்தின் மங்களகரமான தினமான 10.03.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யும்படி   பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. 

செங்கம் பத்திரப்பதிவு அலுவலகம்
இதனை ஏற்று மாசி மாதத்தின் சுபமுகூர்த்த தினமான 10.03.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web