FACT CHECK: பாகிஸ்தான் மீதான போர்... எது எல்லாம் உண்மை செய்தி? முழு லிஸ்ட் இ இதோ...

பாகிஸ்தானின் சில்மிஷங்களுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த பதில் தாக்குதலை பாகிஸ்தான் எதிர்பார்க்கவே இல்லை. இந்நிலையில் போர் தாக்குதல் குறித்து நிறைய போலியான செய்திகளும் வலம் வருகின்றன. எது எல்லாம் இதுவரை வெளியானதில் உண்மையான செய்தி என்று ஒரு லிஸ்ட் பார்க்கலாம் வாங்க.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சில மணிநேரங்களுக்குப் பிறகு, அமிர்தசரஸில் இராணுவத் தளத்தை பாகிஸ்தான் தாக்கியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இந்திய ஆயுதப் படைகளால் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்த பல பாகிஸ்தான் செய்திகளை மத்திய அரசு உண்மைச் சரிபார்த்துள்ளது.
🚨 Fake Letter Alert 🚨
— PIB Fact Check (@PIBFactCheck) May 7, 2025
A letter undersigned by scientist AS Kumar from the Defence Research and Development Organisation (DRDO), is being circulated online alleging a failure in BrahMos missile components.#PIBFactCheck
❌ The letter is fake
⚠️ @DRDO_India has not issued any… pic.twitter.com/Spd2Hy0QTi
சமூக ஊடகங்களில் "சந்தேகத்திற்குரிய உள்ளடக்கம்" பரப்பப்படுவதற்கு எதிராக பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்தது, லாகூரில் 3 குண்டுவெடிப்புகள், விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஒவ்வொரு தகவலையும் கவனமாக ஆராய்வது மிக முக்கியம்," என அது ஒரு பதிவில் கூறியது. இந்திய ஆயுதப்படைகள் அல்லது ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும்பை குடிமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. "குறிப்பாக இந்திய ஆயுதப்படைகள் தொடர்பான சந்தேகத்திற்குரிய உள்ளடக்கம் அல்லது தற்போதைய நிலைமை தொடர்பான ஏதேனும் தகவல்களை நீங்கள் சந்தித்தால், #PIBFactCheck. WhatsApp: +91 8799711259; மின்னஞ்சல்: socialmedia@pib.gov.in" என்று அது கூறியது.
இந்திய ரஃபேல் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை. பஹாவல்பூர் அருகே இந்திய ரஃபேல் ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் கூற்றுகளும் படங்களும் தவறானவை. இந்தப் படம் "2021ம் ஆண்டு பஞ்சாபில் உள்ள மோகா மாவட்டத்தில் விபத்துக்குள்ளான IAF MiG-21 போர் விமானம் சம்பந்தப்பட்ட முந்தைய சம்பவத்திலிருந்து" எடுக்கப்பட்டது என PIB தெளிவுபடுத்தியது.
அதே போன்று ஒரு IAF போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறும் மற்றொரு காணொளியும் போலியானது. "இந்த காணொளி 2019 ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ ஆகும். இதில் இந்திய விமானப்படை (IAF) Mi-17 V5 ஹெலிகாப்டர் ஜம்மு-காஷ்மீரின் புட்காம் அருகே விபத்துக்குள்ளானது" எனக் கூறுகிறது.
"பாகிஸ்தானிய சமூக ஊடக கணக்குகள் ஒரு பழைய காணொளியை மறுசுழற்சி செய்து தற்போதைய சூழலில் பகிர்ந்து கொள்கின்றன" என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று கடந்த 2024ம் ஆண்டு நடந்த ஒரு ஜெட் விபத்தின் மற்றொரு பழைய படம், ஆபரேஷன் சிந்தூரின் தற்போதைய சூழலில் பகிரப்பட்டது. "இந்தப் படம், 2024 செப்டம்பரில் ராஜஸ்தானின் பார்மரில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை (IAF) MiG-29 போர் விமானம் சம்பந்தப்பட்ட முந்தைய சம்பவத்திலிருந்து எடுக்கப்பட்டது" என்று PIB தெளிவுபடுத்தியது. 2025 போர் விமான விபத்து தொடர்பான மற்றொரு பழைய காணொளி. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் இந்திய விமானப்படையை சுட்டு வீழ்த்தியதாகக் கூறி பகிரப்பட்டு வருகிறது. "பகிரப்படும் காணொளி பிப்ரவரி 2025 ல் எடுக்கப்பட்டது, மேலும் குவாலியரின் சிவபுரி அருகே இந்திய விமானப்படை (IAF) மிராஜ் 2000 விமானம் விபத்துக்குள்ளானதை சித்தரிக்கிறது. இது வழக்கமான பயிற்சிப் பணியின் போது நிகழ்ந்தது" என்று அது கூறியது.
ஸ்ரீநகர் விமானப்படை தளத்தை பாகிஸ்தான் விமானப்படை குறி வைக்கவில்லை. பாகிஸ்தான் விமானப்படை ஸ்ரீநகர் விமானப்படை தளத்தை குறிவைத்ததாக பொய்யாகக் கூறும் ஒரு காணொளி சில "பாகிஸ்தான் சார்பு கணக்குகளால்" பரப்பப்படுவதாக PIB குறிப்பிட்டது. இருப்பினும், அந்தக் காட்சிகள் பாகிஸ்தானுக்கே உரியவை, இந்தியாவுக்கே உரியவை அல்ல.
"பல பாகிஸ்தான் ஆதரவு முகவர்களால் பகிரப்பட்ட ஒரு காணொளியில், பாகிஸ்தான் விமானப்படை ஸ்ரீநகர் விமானப்படை தளத்தை குறிவைத்ததாக தவறாகக் கூறப்படுகிறது. பகிரப்பட்ட காணொளி பழையது, இந்தியாவிலிருந்து அல்ல. இந்த காணொளி 2024 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் நடந்த மதவெறி மோதல்களின் காணொளி" என்று அது கூறியது.
இந்திய படைப்பிரிவு தலைமையகத்தை பாகிஸ்தான் அழிக்கவில்லை. நடந்து வரும் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் இந்திய படைப்பிரிவு தலைமையகத்தை அழித்ததாக பல சமூக ஊடகங்கள் கூறின. "தயவுசெய்து சரிபார்க்கப்படாத தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும், துல்லியமான தகவல்களுக்கு இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே நம்புங்கள்" என அறிவுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் வெள்ளைக் கொடியை ஏற்றிய பழைய காணொளி தவறான கூற்றுகளுடன் பகிரப்படுகிறது. அது செப்டம்பர் 2019 இல் வெளியிடப்பட்ட ஒரு பழைய காணொளி, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் இராணுவம் வெள்ளைக் கொடியை ஏற்றுவதைக் காட்டும் வகையில் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான தவறான தகவல் போரில் குதித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!