மக்களே உஷார்... போலியாக இயங்கி வந்த கால் சென்டர்கள்... 16 பேர் கைது!

 
கால் செண்டர்

 

கொல்கத்தாவில் இயங்கி வந்த 2 போலி கால் சென்டரைக் கண்டுபிடித்து 16 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொல்கத்தாவின் செலிம்பூர் பகுதியில் ஒரு கால் சென்டர் மற்றும் பெஹாலா பகுதியில் 2 இரண்டு கால் சென்டர்கள் போலியாக இயங்கி வந்துள்ளது. இந்த மையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது இவை போலி கால் சென்டர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக 16 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். 

கால்செண்டர்

அங்கிருந்து பல செல்போன்கள், கணினிகள், மடிக்கணினிகள், ஹெட்ஃபோன்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த போலி கால் சென்டர்கள் மூலம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களை தொழில்நுட்ப உதவி என்ற பெயரில் பாதிக்கப்பட்டவா்களைத் தொடா்பு கொண்டு மிரட்டிப் பெரும் தொகையை வசூலித்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

கால்செண்டர்

இவர்களுக்கு தேசிய அல்லது சர்வதேச மோசடி கும்பலுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web