கல்லூரி மாணவியைக் காதலித்து உல்லாசம்... ரகசிய வீடியோ எடுத்து காதலனே நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்!

 
மாணவி பாலியல் இளம்பெண் பலாத்காரம் உல்லாசம்

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் மாகடி பகுதியில், கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் 19 வயது மாணவியை, மாகடி டவுனைச் சேர்ந்த விகாஸ் என்ற வாலிபர் ஆசை வார்த்தைகள் கூறி காதலித்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட விகாஸ், மாணவியைக் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல், அதனைத் தனது செல்போனில் ரகசியமாக வீடியோவும் எடுத்துள்ளார்.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

இந்த வீடியோவை வைத்து மாணவியை மிரட்டத் தொடங்கிய விகாஸ், தனது நண்பர்களான பிரசாந்த் மற்றும் சேத்தன் ஆகியோருடன் உல்லாசமாக இருக்குமாறு வற்புறுத்தியுள்ளார். மாணவி மறுத்தபோது, ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி, அவரைச் சேத்தன் என்பவரது வீட்டிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து விகாஸ் மற்றும் அவரது இரண்டு நண்பர்களும் சேர்ந்து மாணவியை மாறி மாறி கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர். தனக்கு நேர்ந்த கொடூரத்தை வெளியில் சொன்னால் அவமானம் ஏற்படும் என அஞ்சி, அந்த மாணவி நீண்ட நாட்களாக யாரிடமும் கூறாமல் தவித்து வந்துள்ளார்.

நாட்கள் செல்லச் செல்ல மன வேதனையைத் தாங்க முடியாமல் மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாகடி டவுன் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் துரிதமாகச் செயல்பட்ட போலீசார், காதலன் விகாஸ், அவனது நண்பர்கள் பிரசாந்த் மற்றும் சேத்தன் ஆகிய மூன்று பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

உல்லாசம் சிசிடிவி செல்போன் பாலியல் மிரட்டல்

குற்றவாளிகளில் ஒருவரான சேத்தன் ஒரு எலக்ட்ரீசியன் என்பதும், அவருக்குத் திருமணமாகி மனைவி இருப்பதும் தெரியவந்தது. சேத்தனின் மனைவி தற்போது கர்ப்பமாக இருப்பதால் பிரசவத்திற்காகத் தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு, தனது காதலியையே நண்பரின் வீட்டிற்கு அழைத்து வந்து விகாஸ் இந்தக் கொடூரத்தைச் செய்தது விசாரணையில் அம்பலமானது. கைதான மூன்று பேர் மீதும் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!