கதறும் குடும்பத்தினர்…. கஜகஸ்தானில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்த இந்திய மாணவர் பலி!

ராஜஸ்தான் மாநிலத்தில் மருத்துவக் கல்வி படித்து வரும் மாணவர் உத்கர்ஷ் ஷர்மா. இவர், கஜகஸ்தானில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் வசித்து வந்தவர் 22 வயதான உத்கர்ஷ். இவர், கஜகஸ்தானில் உள்ள சிம்கென்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் படித்து வந்தார்.வழக்கம்போல ஜிம்மிற்குச் சென்று, குடும்பத்துடன் பேசிக் கொண்டு, நண்பர்களுடன் இரவு உணவு உண்டு, இரவுப் பயணத்திற்குப் பிறகு வீடு திரும்பிய உத்கர்ஷ், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
உடனடியாக நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு மருத்துவர்கள் உத்கர்ஷ் ஏற்னவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். உத்கர்ஷ், ஒரு ஹோமியோபதி மருத்துவரின் மகனாக இருப்பதோடு, கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்த சாதனைகள் புரிந்தவர்.
மாநிலம் மற்றும் தேசிய அளவில் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றதுடன், கல்வியில் என்றும் முதலிடம் பிடித்து வந்தவர் எனக்கூறி அவரது உறவினர்கள் கதறி அழுகின்றனர். இந்த திடீர் மரணம் அவரது குடும்பத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்கர்ஷின் இறுதியாக குடும்பத்துடன் பேசியபோது, புதிய உடைகள் வாங்க பணம் கேட்டிருந்ததாக தெரிகிறது. அவரது சகோதரி மீண்டும் அழைத்தபோது அவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று கொண்டிருந்ததாக கூறினர். தற்போதைக்கு, அவரது குடும்பத்திலிருந்து இருவரும் கஜகஸ்தானை சென்றடைந்துள்ளனர்.
இந்திய தூதரகம், உடலை இந்தியா திருப்பி கொண்டு வர தேவையான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. இந்த கோர சம்பவம் மருத்துவ மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!