பிரபல நடிகர் திடீர் திருமண அறிவிப்பு... முரட்டு சிங்கிள் விரதம் முடிஞ்சிடுச்சி... !

 
பிரேம்ஜி

தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளரும், இளையராஜாவின் சகோதரருமான   கங்கை அமரனுக்கு 2 மகன்கள்.  வெங்கட் பிரபு, பிரேம்ஜி  இருவரும் பன்முகத் திறமை கொண்டவர்கள்.   மூத்த மகன் வெங்கட் பிரபு   நடிகர் விஜய்யை வைத்து The Greatest of All Time என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.  இவருடைய  இளைய மகன் பிரேம்ஜியும் சினிமாவில் பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவரே.

பிரேம்ஜி

இவர் 2006ல் சிம்புவின் நடிப்பில் வெளியான  வல்லவன் படத்தின்  மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்த சென்னை 28 திரைப்படம் தான் பிரேம்ஜிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்தில் அவர் பேசிய, ‘என்ன கொடுமை சார் இது’ என்ற டயலாக் பெரும் வைரலானது.   இவர் நடிகராக மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் பல்வேறு படங்களில் பணிபுரிந்தவர்.   வெங்கட் பிரபுவின்  மன்மத லீலை, பார்ட்டி போன்ற திரைப்படங்களின் இசையமைப்பாளர்  பிரேம்ஜி தான். இத்துடன் 12பி, ராம், திருப்பாச்சி, சென்னை 28, மங்காத்தா, வல்லவன், கோவா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் பல வெற்றிப் பாடல்களையும் பாடியவர். அவருக்கு 44 வயதாகும் நிலையில் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.  

பிரேம்ஜி

முரட்டு சிங்கிளாகவே வலம் வரும்  பிரேம்ஜிக்கு எப்போ திருமணம் என்ற கேள்வி  பல வருடங்களாக முன்வைக்கப்பட்டு வந்தாலும் அதற்கு இதுவரை எந்த பதிலும் கூறாமல் தவிர்த்து வந்தார்.  இந்நிலையில்  தன் திருமணம் குறித்து பிரேம்ஜியே ஒரு லேட்டஸ்ட்டாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். புத்தாண்டு வாழ்த்துடன்  இந்த வருடம் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன் என அறிவித்துள்ளார். ஆனால் பெண் யார் என்பது குறித்து  எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை.இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் பரவி பெரும் வைரலாகி வருகிறது. 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web