கண்ணீர் சிந்தும் பிரபல நடிகை!! எனது தந்தை பெல்ட்டால் விளாசி தள்ளினார்!!

 
உர்பி ஜாவத்

பிரபல மாடலாகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்து வருவர் உர்பி ஜாவித். இவர்  அரை குறை ஆடைகளை அணிந்து அதனை புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டு அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்துவார். உர்பி ஜாவித் ஒரு டிரெண்டிங் டிசைனர் , நடிகை, மாடல், ராப் பாடகர் என பன்முகத் திறமை வாய்ந்தவர். அரை குறை ஆடைகளுடன் அடிக்கடி போஸ் கொடுத்து டிரோல்களுக்கு ஆளாகி அதன்மூலமே புகழ்பெற்றுவிட்டார் உர்பி ஜாவத். தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து உர்பி ஜாவித் தன்னுடைய கண்ணீர் கதையை பதிவிட்டுள்ளார். அதில் நான் லக்னோவில் பிறந்து வளர்ந்தவள். வீட்டை விட்டு வெளியே வரும் போது டாப்ஸ் , ஓவர் கோட் போட்டு தான் வெளியே செல்வேன்.

உர்பி ஜாவத்

ஆனால் எனக்கு 15 வயசு இருக்கும்போது என்னுடைய புகைப்படத்தை மார்பிங்க்  செய்து எனக்கே தெரியாமல் அதை யாரோ ஆபாச வெப்சைட்டில் பதிவிட்டு விட்டனர். இந்த தகவல் என்னுடைய உறவினர்கள் மூலம் என் தந்தையின் காதுக்கு சென்றது. அப்போது முதல்  அவர் என்னை அடித்து துன்புறுத்த தொடங்கினார்.  அது என்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட நார்மலான புகைப்படம் தான். ஆனால் அதனை புரிந்துகொள்ளாத என் தந்தை, என்ன ஆபாச படத்துல நடிக்கப்போறியா என கேட்டு என்ன பெல்டால் அடித்து சித்ரவதை செய்தார். அவரால் நான் உடல் அளவிலும், மனதளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டேன்.  ஆபாச தளத்தில் என் புகைப்படம் வந்த பிறகு அவர் என்னை ஆபாச நடிகை என்று தான் அழைத்து வந்தார். இந்த மாதிரி நடிக்கிறதுக்கு 50 லட்சம் தாராங்களாமே நீ எவ்வளவு காசு வாங்குற  என கேட்டு தினம் தினம் சித்ரவதை  செய்தார். 2 ஆண்டுகள்  அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு சமாளித்தேன்.

உர்பி ஜாவத்

ஒரு கட்டத்தில் தந்தையின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்யவும் முயன்றேன். அதையும் என்னால் சரியாக செய்ய தெரியவில்லை. இதையடுத்து 17 வயதில் நான் வீட்டை விட்டு வெளியேறி மும்பைக்கு ஓடி வந்தேன். அங்கு சின்னத்திரை சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தேன். அப்போது தான் பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் என் வாழ்க்கையே மாறிவிடும் என நினைத்தேன்.  ஒரே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்டாலும்  தற்போது கிடைத்திருக்கும் இந்த புகழுக்கு காரணம் அந்த ஒரு வார பிக்பாஸ் வாய்ப்பு தான்" என கூறியுள்ளார். உர்பி ஜாவித் அரைகுறை  ஆடைகளுக்காக அடிக்கடி டிரோல் செய்யப்படுவது குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது  "எனது ஒழுக்கம் மற்றும் குணநலன் குறித்து என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது.   சமூக வலைதளத்தில் முகம் தெரியாதவர்களின் கருத்துக்களைப் பற்றி கவலைப்படவில்லை. எனது சுய விருப்பத்தின் மூலம் தான் இதனை செய்து வருகிறேன் என தெளிவு பட கூறியுள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web