ரசிகர்கள் அதிர்ச்சி... பிரபல கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்!

இந்தியாவில் ஏப்ரல் 22ம் தேதி ஜம்முகாஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகள் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அதே நாளில் பிரபல முண்ணனி கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீருக்கு அவருடைய மின்னஞ்சலில் 2 முறை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கம்பீர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் முன்னால் எம்பியும் ஆக இருக்கக்கூடிய கௌதம் கம்பீர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து 2 முறை கொலை மிரட்டல் வந்திருப்பதாக டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்து தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கரவாத கும்பலின் நடவடிக்கையை எதிர்த்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் கௌதம் கம்பீர் அவர்கள் தன்னுடைய பதிவை போட்டதை தொடர்ந்து தன்னுடைய மின்னஞ்சலுக்கு கொலை மிரட்டல் வந்ததாக தெரிவித்துள்ளார். இவர் எம்பி ஆக இருந்த 2021 ம் ஆண்டில் இவருக்கு இதே போன்ற ஒரு கொலை மிரட்டல் மின்னஞ்சலில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி காவல்துறையும் தீவிர விசாரணையில் இறங்கி இருப்பதோடு உக்கிரமாக கௌதம் கம்பீருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்குவது குறித்து முடிவுகள் எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கௌதம் கம்பீருக்கு வந்த மின்னஞ்சலில் ” நாங்கள் உன்னை கொல்ல போகிறோம் ” என்ற வரிகள் இடம்பெற்று இருந்தாக கூறப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!