அதிவேகத்தில் கார் மோதி ஐ.டி. நிறுவன தலைவி பலி.. அதிகாலையில் நடந்த சோகம்!

 
ராஜலெட்சுமி ராம கிருஷ்ணன்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் தாதர் மதுங்கா பகுதியை சேர்ந்தவர் ராஜலெட்சுமி ராம கிருஷ்ணன் (42). இவர் மும்பையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தின் தலைவராக பணிபுரிந்து வந்தார். தனது நெருக்கடியான பணிக்கு மத்தியில், நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். மேலும் தொடர்ந்து மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளை குவித்து வந்தார்.

ராஜலெட்சுமி ராம கிருஷ்ணன்

அந்த வகையில் ராஜலெட்சுமி நாள்தோறும் காலையில் தனது வீட்டின் அருகே உள்ள மும்பை லொர்லி சி பேஸ் சாலையில் நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம். அந்தவகையில் ராஜலெட்சுமி நேற்று வாரவிடுமுறை நாள் என்பதால் வழக்கம்போல காலை 6.30 மணியளவில் லொர்லி சி பேஸ் சாலையில் நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். 

ராஜலெட்சுமி சாலையின்யோரம் நடைபயிற்சி சென்றபோது, அந்த சாலையில் அதிவேகமாக சென்ற கார் ஒன்று அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜலெட்சுமி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

ராஜலெட்சுமி ராம கிருஷ்ணன்

அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு விசாரணையை தொடங்கினர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜலெட்சுமி மீது காரை மோதிய கார் டிரைவர் சுமிர் மெர்செண்ட் (23) என்ற நபரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 
 

From around the web