3 தேசிய விருதுகள் பெற்ற பிரபல மலையாள இயக்குநர் காலமானார்!

பிரபல மலையாள இயக்குநர் ஷாஜி நீலகண்டன் கருணாகரன். இவர் கேரள மாநில சாலசித்திர அகாடமி, கேரள மாநில திரைப்பட மேம்பாட்டு கழகம் ஆகியவற்றின் தலைவராக பதவி வகித்து புகழ் பெற்றவர்.
ஷாஜி கருண் என்றழைக்கப்பட்ட இவர் இயக்கிய 'பிறவி, வானபிரஸ்தம், குட்டி ஸ்ராங்க்' திரைப்படங்களுக்காக மூன்று தேசிய விருதினை பெற்றவர். மலையாள சினிமாவை பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆக்கியதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. மலையாள சினிமாவுக்கு பெருமை சேர்த்த ஷாஜி கருண் நீண்ட நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடுமையாக அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு வயது 73. இவரது மறைவுக்கு பிரபலங்கள், திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!