பிரபல சின்னத்திரை நடிகரின் திருமண அறிவிப்பு! சீரியல் நடிகையை நிஜத்திலும் மணக்கிறார்!

 
பிரிட்டோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ராஜா ராணி 2 சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் பிரிட்டோ, சீரியலில் ஜோடியாக நடித்து வந்த நடிகையை காதலித்து, நிஜத்திலும் திருமணம் செய்கிறார். இதற்கான அறிவிப்பும் இருவரின் நிச்சயதார்த்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. ரொம்ப நல்ல ஜோடி என்று ரசிகர்கள் சீரியலில் பார்த்தே கொண்டாடிய நிலையில், இப்போ இந்த ஜோடி நிஜத்திலும் ஒன்று சேர்கிறது. 

Brito-Sandhya

இந்த சீரியலில் மார்க்கண்டயன் குடும்பத்தின் தலைவராகவும் சீதா அவருடைய மனைவியாகவும் இருக்கிறார். அவருடைய குழந்தைகளாக ரேவதி, ரவி, ராஜா மற்றும் மலர் என 4 பேர் இருக்கின்றனர். அவர்களில் மலர் மார்க்கண்டேயன், சீதா சம்மதம் இல்லாமல் பாண்டியை காதலித்து திருமணம் செய்து விட்டார். ஆரம்பத்தில் இவர்களுக்குள் நன்றாக சென்றிருந்த நேரத்தில் இப்போது பாண்டி மற்றும் மலர் இடையே சண்டை போட்டு கோபத்தில் இருக்கின்றனர். இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று மார்க்கண்டேயன் நினைக்கிறார். மார்க்கண்டேயனுக்கு பிடித்த மருமகனாக பாண்டி இருக்கிறார்.

இந்நிலையில் சீரியலில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அதே பாண்டியும் மலரும் ஒன்றிணைந்து இருக்கின்றனர். பாண்டியாக நடிக்கும் பிரிட்டோவும் மலராக நடிக்கும் சந்தியாவும் நிஜத்தில் எங்கேஜ்மென்ட் முடிந்திருக்கும் செய்தியை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கின்றனர். இது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருப்பதாகவும் இருவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தங்களுடைய வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். 

இந்த ஜோடியின் நிச்சயதார்த்தம் கடந்த மாதம் 25ம் தேதி முடிந்து இருக்கிறது. இந்நிலையில் தங்களுடைய எங்கேஜ்மென்ட் புகைப்படங்களை இவர்கள் இன்று தான் வெளியிட்டு இருக்கிறார்கள். இவர்களுடைய எங்கேஜ்மென்ட் எளிமையாக முடிவடைந்து இருக்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web