கோரிக்கை நிறைவேறியதால் அதிகாரிகள், பொதுமக்களுக்கு கறி விருந்து கொடுத்து மகிழ்ந்த விவசாயிகள்!

 
பொதுமக்களுக்கு கறி விருந்து
 


தங்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால் அதிகாரிகள், பொதுமக்களுக்கு கறிவிருந்து கொடுத்து விவசாயிகள் மகிழ்ந்துள்ளனர். 

பாகூர் அருகே குருவி நத்தம் கிராமத்தில் தானியக்கிடங்கு மற்றும் உலர் களம் வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் செந்தில் குமார் எம்எல்ஏ பரிந்துரையின் பேரில், புதுச்சேரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை நிதியின் கீழ் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் குருவி நத்தம் இருளன் சந்தை புறாந் தொட்டி பகுதியில் தானியக் கிடங்குடன் கூடிய களம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன் தலைமை தாங்கினார். விவசாயி முத்து வரவேற்றார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக செந்தில் குமார் எம்எல்ஏ கலந்து கொண்டு தானியக் கிடங்குடன் கூடிய களத்தை திறந்து வைத்தார். பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதா சிவம், உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சிவப்பிரகாசம், கிராம திட்ட ஊழியர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிகாரிகள், பொது மக்கள் அனைவருக்கும் கறி விருந்து வைத்து நன்றி தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web