கோர விபத்து...கன்டெய்னர் லாரி மீது கார் மோதி தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் பலி, 2 பேர் கவலைக்கிடம்!

 
விபத்து

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பூத்தலப்பட்டு - நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். அந்த வகையில் இன்று தேசிய நெடுஞ்சாலையில் பாகாலா மண்டலம் தோட்டப்பள்ளி என்ற இடத்தில் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது அதிவேகமாக சென்ற கார் மோதி கோர விபத்து ஏற்பட்டது.  

ஆம்புலன்ஸ்
இந்த விபத்தில் கன்டெய்னர் லாரிக்கு அடியில் கார் சிக்கி கொண்ட நிலையில், காரில் பயணம் செய்த 2 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். 

உத்தரபிரதேச போலீஸ்

அங்கு இருந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் படுகாயத்துடன் இருந்த 2 பேரை மீட்டு  உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.   இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து ஆந்திர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web