சோகத்திலும் நெகிழ்ச்சி... மகனின் திருமணத்திற்கு முதல் நாள் தந்தை உயிரிழப்பு... அப்பா முன் திருமணம் !

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வருபவர் 60 வயது வரதராஜ். இவரது மகன் 26 வயது மனிஷ். மனிஷுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த பெற்றோர், அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
மார்ச் 10 ம் தேதியான நேற்று திருமணம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தனர். இந்நிலையில், முந்தைய நாள் இரவில் வரதராஜன் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
அவரின் மறைவு குடும்பத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இதனால் திருமணமும் நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், உறவினர்கள் தலையிட்டு திருமணத்தை நடத்த உதவி செய்துள்ளனர். உறவினர்களின் ஆலோசனைப்படி, உயிரிழந்த மனிஷின் சடலம் முன்பு தம்பதிகள் தாலி கட்டி திருமணம் செய்துகொண்டனர். இச்சம்பவம் குறித்த நெகிழ்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!