3 மகள்களை தூக்கிலிட்டு தந்தை தானும் தற்கொலை...மனைவி உயிரிழந்ததால் சோகம்!

 
bihar

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் மிஸ்ரௌலியா கிராமத்தில் 40 வயதான அமர்நாத் ராம், தனது மூன்று மகள்களையும் கொன்று, தன்னையும் தற்கொலை செய்த மனதை உலுக்கும் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு மனைவி இறந்த நிலையில், அமர்நாத் ராம் தனது ஐந்து குழந்தைகளுடன் வாழ்ந்தார். சம்பவம் நடைபெறும் முன், குழந்தைகளுக்கு முட்டைகளைச் சமைத்துக் கொடுத்த அவர், மனைவியின் சேலைகளை கயிறுகளாகப் பயன்படுத்தி, மூன்று மகள்களையும் தன்னையும் பெட்டியின் மீது ஏறி குதிக்கச் செய்தார். அதிர்ஷ்டவசமாக, இரண்டு மகன்கள் குதிக்காமல் நிலைத்ததால் உயிர் பிழைத்தனர்.

ஆம்புலன்ஸ்

கிராமவாசிகள் மற்றும் போலீசார் கூறுவதில், மனைவியின் மறைவு, தனியார் நிதி நிறுவன கடன் அழுத்தம் மற்றும் குழந்தைகள் பராமரிப்பின் சிரமம் காரணமாக அமர்நாத் ராம் இந்த கொடூர முடிவை எடுத்திருக்க வாய்ப்பு உள்ளது. சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!