கர்ப்பிணி மகளைக் கொன்று ஆற்றில் வீசிய தந்தை... பகீர் பிண்ணனி!
உத்தரபிரதேச மாநிலம் மஹுதிஹ் பகுதியில் உள்ள ஹெடிம்பூர் மதியா கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு காணாமல்போனார். வெளியே சென்ற அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அப்பெண்ணின் சடலம் சோட்டி கந்தக் ஆற்றில் கடந்த கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அப்பெண்ணின் தந்தையே இளம்பெண்ணை கொலை செய்து ஆற்றில் வீசியது தெரியவந்துள்ளது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ஆற்றின் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. கிராமத்தில் உள்ள ஒரு இளைஞருடன் அவர் தொடர்பு வைத்திருந்த நிலையில், யாரோ ஒருவர் இதுபற்றி பெண்ணின் தந்தை நௌஷாத்திடம் தெரிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியைக் கேட்டு மனமுடைந்த நௌஷாத், தன் மகளை கொன்றது விசாரணையில் தெரியவந்தது. வீட்டில் வைத்து இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு, பின்னர் அவரது உடலை ஒரு சாக்கு பையில் கட்டி ஆற்றில் வீசினார். பின்னர் தனது மகள் காணாமல் போனதாக நாடகமாடியுள்ளார். மேலும் தேடுதல் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் விசாரணையின் போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று அதிகாரி கூறினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!