கொடூரம்... மகள், மருமகன், பேத்தியை நடுத்தெருவில் நிற்க வைத்து சுட்ட தந்தை... !

 
roshini

பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டம் நவ்டொலியா கிராமத்தில்  வசித்து வருபவர்  பப்பு சிங். இவருக்கு திராஜ் சிங் என்ற மகனும், சாந்தினி குமாரி  என்ற மகளும் உள்ளனர்.  இவர் அதே பகுதியில் வசித்து வந்த  சந்தன்குமாரும்  காதலித்து வந்தனர். காதலுக்கு பப்பு சிங் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களின்  எதிர்ப்பையும் மீறி  சந்தன்குமாரும் சாந்தினியும் திருமணம் செய்து கொண்டனர்.


 ஊருக்கு வெளியே  இருவரும் யாருக்கும் தெரியாமல் வசித்து வந்தனர். இவர்களுக்கு  ரோஷ்னி குமாரி  என்ற மகள் உள்ளார். இந்நிலையில், சந்தன்குமாரும், சாந்தினி குமாரியும் தங்கள் குழந்தையுடன் நேற்று மாலை 5 மணியளவில் நவ்டொலியா கிராமத்திற்கு வந்திருந்தனர்.  இதனை பார்த்த சாந்தினியின் தந்தை அவர்களுடன் தகராறில் ஈடுபட்டார்.  ஆத்திரம் அடங்காத பப்புசிங் தான் வைத்திருந்த இரும்பு கம்பியால் மகள், மருமகன், பேத்தி  3 பேர் மீது தாக்குதல் நடத்தியதால் சற்று நேரத்தில்  3 பேரும் மயங்கி விழுந்தனர்.  

திராஜ் சிங், துப்பாக்கியால் சகோதரி சாந்தினி குமாரி, அவரின் கணவன் சந்தன்குமார், மகள் ரோஷ்னி குமாரி மீதும் சுடத் தொடங்கினார்.  இதனால் 3 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.  பப்பு சிங் மற்றும் அவரது மகன் திராஜ் சிங்கும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும்  போலீசார், விரைந்து வந்து உயிரிழந்த 3 பேரின் சடலத்தையும்  மீட்டு  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.   கொலை செய்துவிட்டு தலைமறைவான 2 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web