தந்தையை கிரிக்கெட் பேட்டால் அடித்தே கொலை !! மகன் பரபரப்பு வாக்குமூலம்!!
சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் சண்முக ராஜா பகுதியில் வசித்து வருபவர் 55 வயது பாலசுப்பிரமணியன் . இவரது மனைவி 48 வயது சுப்புலட்சுமி . இவர்களுக்கு 28 வயதில் சுமித்ரா என்ற மகளும் 23 வயதில் ஜபரீஷ் என்ற மகனும் உள்ளனர். இவர்களுக்குள் சொத்து பிரச்சனை காரணமாக குடும்பத்துக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.
இதனால் தாய், மகன், மகள் மூவரும் பாலசுப்பிரமணியை வீட்டில் அனுமதிக்காமல் இருந்து வந்தனர். அத்துடன் குடிபோதைக்கு அடிமையான பாலசுப்பிரமணி தினமும் குடித்து விட்டு தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இதனால் கடந்த ஒரு வருடகாலமாக பாலசுப்பிரமணி குடும்பத்தில் இருந்து பிரிந்து வீட்டின் கீழ் நடைபாதையில் வசித்து வந்தார். நேற்று சுமித்ராவுக்கு உடல் நலக்குறைபாடு ஏற்பட்டதால் இதனால் தம்பி ஜபரீஷ் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். இருவரும் வீடு திரும்பியதும் குடிபோதையில் இருந்த பாலசுப்பிரமணி சகோதரி சுமித்ராவை பற்றி அவதூறாக பேசி ஆபாசமாக திட்டினார். ஆத்திரமடைந்த ஜபரீஷ் அவரது தந்தை பாலசுப்பிரமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றியதில் திடீரென கீழே கிடந்த கிரிக்கெட் மட்டை மற்றும் செங்கலால் தந்தை பாலசுப்பிரமணியின் தலையில் சராமாரியாக தாக்கினார். இந்த கொடூரத் தாக்குதலில் பாலசுப்பிரமணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தனது தந்தையை கொலை செய்துவிட்டதாக அவரே காவல்துறைக்கு தகவல் அளித்தார். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஜபரீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலசுப்பிரமணி உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!