பிப்ரவரி 27ம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை!!

 
விடுமுறை

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ  திருமகன் சமீபத்தில்  மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் .இதனையடுத்து காலியாக உள்ள அந்த  தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதில்  77 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் 5 வாக்குப்பதிவு இயந்திரம் 1 கட்டுப்பாட்டு இயந்திரம் பொருத்தப்பட உள்ளன. அத்துடன் பதட்டமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட இருக்கின்றன

உள்ளூர் விடுமுறை
இந்த தேர்தலுக்கான அரசியல் பிரச்சாரங்கள் சூடு பிடித்து வரும் நிலையில் ஒவ்வொரு கட்சியும்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் நாளான பிப்ரவரி 27ம் தேதி அப்பகுதி முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அரசு அமைப்புகளின் நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பிப்ரவரி  27ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்த அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web