கைக்குழந்தையுடன் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட பணிபுரிந்த பெண் காவலர்... குவியும் பாராட்டுக்கள்!
ஆந்திராவில் ஒரு பெண் காவலர் தனது கைக்குழந்தையுடன் போக்குவரத்தை சீரமைத்து ஆம்புலன்ஸுக்கு வழி திறந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு காக்கிநாடாவுக்கு வந்த 17ஆம் தேதி, ரங்கம்பேட்டை காவல் நிலையத்தை சேர்ந்த ஜெயசாந்தி பணி செய்தார்.
அந்த நாளில் பணி முடிந்து தனது குழந்தையை உறவினர் வீட்டில் விட்டு, பணி முடிந்தபின் வீட்டுக்கு செல்லும் வழியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் தவித்தது. ஜெயசாந்தி உடனே தனது குழந்தையை கையில் எடுத்துக்கொண்டு, போக்குவரத்தை சீரமைத்து ஆம்புலன்ஸுக்கு பாதை அமைத்தார்.

இதைக் பார்த்த வாகன ஓட்டிகள் அவளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சிலர் இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். வீடியோ தற்போது வைரலாகி, அவரை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
