பெண் கிராம நிர்வாக அலுவலர் தூக்கிட்டு தற்கொலை !

 
நவீனா


நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள குன்னமலை சிக்கிநாயக்கன்பாளையம் பகுதியில் பொன்னுசாமி (35)- நவீனா (32) தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 4 வயதில் மகன் உள்ளான். பொன்னுசாமி நாமக்கல் தொட்டிப்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். நவீனா திருச்செங்கோடு தாலுகா பிரிதி கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார்.

நவீனா
இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக நவீனா மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது, நவீனா தனது புடவையால் தூக்குப்போட்டு கொண்டார். நீண்டநேரமாக அவர் வீட்டில் இருந்து வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் அவரை தேடிச்சென்றனர். அப்போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். எனினும் அவரை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நவீனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

போலீஸ்
இதுகுறித்து தகவல் அறிந்த நல்லூர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் நவீனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நவீனா தந்தை நடராஜன் நல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மகள் இறப்புக்கு காரணமான பொன்னுசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web